இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
September 30, 2009
உனக்குள் ஒருவன்..!
தீவிரவா தத்தின் துளைக்குமந்த வேர்தனை
தீவிரமாய்த் தூரறுக்கும் வாய்ப்புக்கும் - தீயாய்
எரிக்கவும் காத்திருக்கி றானொருவன்; உன்னுள்
இருக்கும் அவனையு ணர்
[29-09-09]
தீவிர வாதத்தின் கூர்மிகுந்த வேர்தனை
தீவிரமாய்த் தேடித் தரைவீழ்த்த - தீயின்
தனலாக வாய்ப்புக்(கு) தவிக்கும் ஒருவன் ;
உனக்குள் அவனை உணர் ..
[04-10-09]
September 29, 2009
வழுக்கியது பசியிலா? பாசத்திலா ?
September 27, 2009
பாரதியின்.........!
வேரோடு என்னையே வீழ்த்திய தாய்எண்ணி
யாருமி ருந்துவிடா தீர்பாரும்; தீந்தனலாய்ப்
பாரதிரத் தீயோரை வெந்துதணிப் பேன்;நானே
பாரதியின் அக்கினிக் குஞ்சு
[29-09-09]
[இன்னிசை/ஒருவிகற்பம்]
வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..
[04-10-09]
[நேரிசை/ஒருவிகற்பம்]
வாழ்த்து
26-09-09 அன்று அய்யா தமிழன் வேணு அவர்களின் பிறந்தநாள்
குழுமத்தில் செந்தமிழைப் போற்றும்; வளர்ந்த
குழந்தையின்பி றந்தநா ளின்றேதான் -ஆள்தமிழே
நூறாயுள் தாஎனக்கு! உன்தலைம கன்அவனை
நூறாண்டு நான்வாழ்த் தவே!!
’தமிழ்தான்வே ணும்’என் னுமிடத்தில் தலைவர்
தமிழ்வேணு; தன்னால் வருவாரவர்! - தம்மைத்
தமிழாக்கி இன்பம் தருவார்!!; செழிப்பார்
தமிழன் னையைப்போ லவே
காத்திருக்கும்....!
September 24, 2009
புகையேப் பகை
புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகை செய்வார் உணர் ..
திருத்தம் :ப்ரசாத்
புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகையதைச் செய்வார் உணர் ..
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகையதைச் செய்வார் உணர் ..
September 23, 2009
வானும் நானும்
சிட்டுக் குருவி - 2
சிட்டுக் குருவி
வீட்டில் பாடம்
உணர்ந்து கொள்
September 22, 2009
கண் தானம்
எல்லாம் தெரியும்
நவீன மரபு
எய்ட்ஸ்
நகரத்தான் விஜயம்
ஏக்கம்
மாமியாரான மருமகள்
நான்
மாணவன்
வணக்கம்
Subscribe to:
Posts (Atom)