இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
December 31, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
எல்லாம் அவள் :
27)
கொடியவள்; நாள்தோறும் என்மனம் கொல்வாள்;
இடையில்லாப் பூங்கொடிய வள்
28)
உறங்கிக் கிடந்தேன்; உலுக்கி அணைத்தாள்;
கிறக்கத்தில் இப்பொழுது நான்
30)
மின்னஞ்சல் வந்துவிழும் மின்னலவள் பேரோடு;
பொன்னூஞ்சல் ஏறும் மனது
December 28, 2011
வெண்பா வ(ப)டிக்கலாம் வா....5
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
December 24, 2011
வெண்பா வ(ப)டிக்கலாம் வா....4
December 18, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
December 13, 2011
வெண்பா வ(ப)டிக்கலாம் வா....3
December 12, 2011
வெண்பா வ(ப)டிக்கலாம் வா....2
December 11, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
கூடல்:
19)
கண்டோடி, பின்நின்று, கண்ணசைப்பாள்; கண்டபடிக்
கொண்டாடித் துள்ளும் மனது
குறிப்பை விட்டுச் செல்கிறாள் அவள் :)
ஊடல்:
20)
'மலரேன்'*என்(று) என்மனதைத் தைத்தாள்; 'மலரேன்'**
எனவேண்டும் பைத்தியமாய் நான்
(ஒர் வார்த்தை - இருபொருள் _
*எதிர்ப்பதம் - மலர/பூக்கமாட்டேன் என்று மறுக்கிறாள் மலர் போன்ற அவள்.
** வேண்டுகோள் - மலர்வாயா எனக்காக ? எனறு வேண்டும் பைத்தியமாய் அவன் )
21)
மார்கழியில் மாருள் குளிரெடுக்க; சாமத்தில்
ஊர்க்கோழி* மட்டும் துணைக்கு
(தனிமையின் வேதனை)
* ஊர்க்கோழி - எங்கோ ஊர்எல்லையில் இரவெல்லாம் விழித்துக் கூவியபடி இருக்கும் )
...இன்னும் வரும் :)
வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!
புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....
பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்
1. அக்கினிக் குஞ்சு :
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..
December 8, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நட்பை வெல் :
17)
சொத்திருந்தால் சார்ந்திருக்கும் சுற்றமெல்லாம் சுற்றிவரும்;
செத்தாலும் சேர்ந்துவரும் நட்பு
பகையைக் கொல்:
18)
சிதைத்திடுவோம் என்போர்முன் சீறு; 'விதைநான்,
சிதைத்திடுவோம் என்போர்முன் சீறு; 'விதைநான்,
புதைப்போர்முன் தான்முளைப்பேன்' என்று
December 7, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
கனவு :
15)
கனவில் விழாமல் கவனமாய்க் கண்விழித்தும்என்கனவில் கண்டேன் கனவு
16)
காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்
வானமும் நம்வசப்ப டும்
December 6, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
உழவு :
13)
பயிர்விதைத்து கண்பூத்துக் காத்திருப்பான்; பூக்கா(து)
உயிர்பறித்துச் சென்றுவிடும் அது
நம்பிக்கை :
14)
மரங்களும் ஓர்நாளில் மண்ணுள் புதையும்;
மரணமில்லை என்றும் விதைக்கு
December 5, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
பாடம் :
11)
11)
படிப்பினைத் தூர்ந்தேன்; எடுப்பினைத் தேர்ந்தேன்;
படிப்பினை ஆனேன் பிறர்க்கு
12)
ஒழிக்க முடியாத(து) ஒன்றுன்முன் வந்தால்
ஒளிந்து விடுவது நன்று
ஒளிந்து விடுவது நன்று
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
உழவு :
9)
ஏரில் சறுக்கும் உழவனை; 'பாரில்'
வரவேற்றுப் போற்றும் அரசு
விளக்கம் :
ஒரு குறள் - இரு பொருள் ....:)
அரசு சீரளிப்பதாகவும் கொள்ளலாம் ...
அரசு சீரழிப்பதாகவும் கொள்ளலாம்.............:))
உறவு :
10)
நெருப்பால் உருகும் மெழுகுபோல்; 'உள்ள'வெறுப்பால் கருகும் உறவு
..விடாமல் வரும்
..விடாமல் வரும்
December 3, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
முதல் அன்னை / தாய்க்கும் தாய்
7)
7)
முள்ளின் முனையளவு சொல்லித்தா; என்தமிழ்த்தாய்
அள்ளித் தருவாள் உனக்கு
8)
தடம்மாற்றம் இன்றியவள் தாள்தொடர்ந்தால் வாய்க்கும்
தடுமாற்றம் இல்லாத வாழ்வு
...விடாமல் தொடர்வேன் :)
December 2, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நம்பிக்கை :
3)
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு
ஆறுதல் வார்த்தை உனக்கு
4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது
வலியதாய் ஆகும் மனது
December 1, 2011
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
வாழ்க உறவுகள் ...
என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......
என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் ’குறள்’ என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..
கடவுள் :
1)
பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை
மறவாமை வாய்த்தால் இனிது
2)
எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது
நிற்பான் எனையாள் பவன்
...........தொடர வாய்ப்பளியுங்கள்
Subscribe to:
Posts (Atom)