இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உள்ளத்தில் உள்ளதைச் சொல்வேன் :

136)
நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி

137)
தூங்க முடியா நிலைவரும்; தாங்க
முடியா பொருள்சேரும் போது

138)
வனத்துள் அலைந்தாலும் அந்திமத்தில் கொண்ட
இனத்துள் அடைந்தால் சிறப்பு

139)
நிறத்தால் உயராதாம் உன்தரம்; உள்ள(த்)
திறனைத்தான் சார்ந்த(து) அது

140)
நம்புவ(து) எல்லாமும் நன்றென்(று) இருப்பதில்லை
நன்றென்று தோன்றுவதை நம்பு

No comments: