இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தெரிந்ததைச் சொல்வேன் :)
146)
தோளின் வலிமைதான் பேரழகு; கண்மூடித்
தோலின்முன் வீழும் உலகு

147)
வலியறியாப் பாறையையும் போகும் வழியறியாப்
பாதையையும் தேரா(து) ஒதுக்கு

148)
திசைஎல்லை எல்லாமும் தேர்ந்தும் விசையில்லை
என்றால் தவறும் இலக்கு

149)
பிஞ்சில் பழுப்பதற்(கு) அஞ்சு; வகுத்ததை
மீறும் எதுவுமே நஞ்சு;

150)
திக்கெட்டைத் தாண்டி சிறகை விரித்தாலும்
கொப்பில் உறங்குமாம் கொக்கு

No comments: