இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கனவே நினைவாக :

151)
அசத்தல் கனவு; வசமாக்க வந்தாள்;
நிசத்தில்என் முன்னால் நிலவு

152)
உன்னைஉள் வாங்கும் பொழுதெல்லாம் நான்பெறுவேன்
விண்ணைவில் ஆக்கும் திறன்

153)
வந்தணை என்றவரம் வேண்டுவேன்; தந்தவுடன்
வந்தனை செய்வேன் பணிந்து

154)
தழுவல் விலக்குவாள்; தள்ளித் தவழ்வாள்;
நழுவுமென் காலின்கீழ் வாழ்வு

155)
எதிரிருந்தும் இல்லை இழுத்தணைக்கும் வாய்ப்(பு);என்
எதிரிக்கும் வேண்டாமிவ் வாழ்வு

No comments: