இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


ஏன் ஏங்க வைக்கிறாள் இவள் ? :
171)
விரகம் இறுக்க விரைவான் அவனும்;
விரதம் இருப்பாள் அவள்


172)
ஏமாறத் தான்வேண்டும் நானின்றும்; ஏன்மாற
வில்லையாம் இன்னும் அவள்


173)
வாய்ப்போடு வந்தமர்ந்தேன்; வாய்ப்பாடு கேட்டுவிட்டாள்;
வாய்ப்பூட்டுள் சிக்கியது நாக்கு


174)
இல்லாள் பெருமையைக் கேட்காமல் சொல்லும்
அவளருகில் இல்லாப் பொழுது


175)
செல்லக் கிளிச்சொல்லைக் கேளாமல் வந்தஎன்னுள்
மெல்லப் படரும் கிலி


No comments: