இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்து கொள், அறியாமையைக் கொல்:
156)
தங்கி இருத்தலும் தேங்கிக் கிடத்தலும்
ஒன்றல்ல என்ப(து) அறி

157)
தனித்துவந்தோம் என்று தவறாய்க் கணித்துத்
’தணிந்துபோ’ என்போரை வீழ்த்து

158)
புலியின்மேல் உள்ள வரிகள் அனைத்தும்
தழும்பல்ல என்ப(து) அறி

159)
பத்துக்குள் ஒன்றென்று முங்காது; நான்தான்
பதினொன்(று) எனமுந்தி வா

160)
உள்க்காயம் ஏற்கப் பழகு; துளையின்றிப்
புல்லாங் குழலும்தான் ஏது

No comments: