இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 13, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்


வாக்கும் நாக்கும் : / பொருள்

211)
பானம் பருகிய பின்சொல்லால் பாணம்
தொடுக்கும்வில் ஆகிவிடும் நாக்கு

212)
இதயத்தில் தொக்கிக் கிடப்பதுதான் நாக்கில்
உதித்து வெளியே வரும்

213)
சொல்வாக்கு சுத்தம் இருக்கும் இடம்தேடி
செல்வாக்கும் ஓடி வரும்

214)
வாக்கால் உயர்வடைய வேண்டுமெனில் முன்துள்ளும்
நாக்கிற்குப் போடு தடுப்பு

215)
வாக்கால் இணைந்துவிட்டால் நம்முள் வருமாமோ
வாய்க்கால் தகராறு கூறு

No comments: