இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



ஏன் ...?!/ பொருள்

226)
கையூட்(டு) எனும்கள்ளம் அன்பளிப்பாய் மாறியின்று
கட்டணம் என்றானது ஏன்

227)
மரம்விதைத்து சாலைசென்ற(து) அன்றுதான்; இன்று
மரம்புதைத்த சாலைகள் ஏன்

228)
பெருக்கியள்ளும் குப்பையை வீதியில் வீசிவரும்
குற்றமற்றத் தன்மைவந்த(து) ஏன்

229)
தனித்தனியாய் வாழும் முறைதான் இனிதென்னும்
எண்ணம் உருவான(து) ஏன்

230)
கோடிகள் மொத்தமும் நாட்டிலுள்ள கேடிகளை
மட்டுமே நாடுவ(து) ஏன்

No comments: