அன்பே..அன்பே : / இன்பம்
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு
267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா
268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு
269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி
270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ