இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 3, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


மகிழ்வில், மனமுறிவில் சில ‘போ’க்கள்..:


241)
தாழும் பொழுதுன்தோள் தூக்கஆள் வந்துநின்றால்
வாழ்நாளை வென்றவன்நீ போ

242)
தன்னலம் இன்றிச் செயல்புரிவோர்க்(கு) எல்லாமும்
தன்னால் அமைந்துவிடும் போ

243)
காத்திருந்தால் வாராது வாழ்வு; உனைச்சுற்றி
காற்றிருந்தும் வீசாது போ

244)
காலின்கீழ் மட்டுமே சுத்தமெதிர்ப் பார்க்காதே;
கீழ்க்குணத்தின் கீழ்அது போ

245)
உன்னை அறியாமல் உண்மை புரியாமல்
வாழ்ந்து பயனென்ன போ

No comments: