241)
தாழும் பொழுதுன்தோள் தூக்கஆள் வந்துநின்றால்
வாழ்நாளை வென்றவன்நீ போ
242)
தன்னலம் இன்றிச் செயல்புரிவோர்க்(கு) எல்லாமும்
தன்னால் அமைந்துவிடும் போ
243)
காத்திருந்தால் வாராது வாழ்வு; உனைச்சுற்றி
காற்றிருந்தும் வீசாது போ
244)
காலின்கீழ் மட்டுமே சுத்தமெதிர்ப் பார்க்காதே;
கீழ்க்குணத்தின் கீழ்அது போ
245)
உன்னை அறியாமல் உண்மை புரியாமல்
வாழ்ந்து பயனென்ன போ
Tweet | |||||
No comments:
Post a Comment