இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




கடன் :/பொருள்
261)
கடலுக்குள் ஆழ்ந்தவர்க்கும் வாய்ப்புண்டாம்; இல்லை
கடனுக்குள் வீழ்ந்தவர்க்கு வாழ்வு

262)
கடனில்லாக் கூழ்கால் வயிறு கிடந்தால்
கடக்கும் பலநாள் இனிது

263)
திரண்டுருண்டு பேருவம் கொண்டுன்னைக் கொல்ல
வரும்வாங்கும் குட்டிக் கடன்

264)
இடம்செல்வம் சூழ்ந்தநல் வாழ்வை விடவும்
கடனில்லா ஏழ்மை சிறப்பு

265)
வீட்டை அடகாக்கி வாங்கித் திளைப்போர்க்குக்
’கேட்’டில் இடமுண்(டு) உணர்

No comments: