பிணக்கில் விழவைப்பாள்; நானறிவேன் இன்று
கணக்கில் சிலஇழப்பேன் என்று
277)
கொழுந்துவிட்டாள் என்னுள்; இடம்கொடுத்தேன்; பற்றிக்
கொளுந்துவிட்டால் என்செய்வேன் நான்
278)
கண்ணாடி முன்னாடி நான்நிற்பேன்; உள்ளிருந்து
என்கண்ணுள் பார்ப்பாள் அவள்
279)
ஓர்வார்த்தை சொல்லாள்;கூர்ப் பார்வையால் கொல்வாள்;ஆம்
போரின்றி வெல்வாள் இலக்கு
280)
இதழ்சுழிப்பாள்; ஆழ்சுழலில் சிக்கிய பூவின்
இதழாக மூழ்கும் மனது
Tweet | |||||
No comments:
Post a Comment