இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்




அன்பும்...அமைதியும் :

281)
அன்பென்னும் ஆயுதம் ஆளுமிட அண்மையின்
முன்பென்றும் வாராது வம்பு

282)
மகிழ்ந்த மனமுடையோர் முன்வாசல் தன்னில்
முகிழ்ந்து வரும்நல் உறவு

283)
அமைதியாய் உள்ளம் சமைந்துவிட்டால் சுற்றி
அமைவ(து) அனைத்தும் விருந்து

284)
நினைப்பதை எல்லாம் நிறைவாய் நினை;உந்தன்
எண்ணம்போல் தானமையும் வாழ்வு

285)
ஒத்து வரவில்லை என்றபின் பேசா(து)
ஒதுங்கி விடுவது நன்று

No comments: