291)
முகில்கண்டு கொட்டும் மழைகண்டு மக்கள்
திகில்கொண்டால் எங்கோப் பிழை
292)
மாறிவரும் காலமிது; சொல்வீரா மண்குளிர
மாரிவரும் காலமெது என்று
293)
கலிகாலம் எல்லாம்ஏன் உன்கண்முன் வீழும்
உழவை ஒதுக்கும் உலகு
294)
ஏரியுள் சேரும் மழைநீர் தரும்சோறு;
கூரையுள் என்றாலோ சேறு
295)
பிழைக்கும் வழியின்றி பள்ளத்துள் வீழும்
மழைநீரைப் பேணா உலகு
Tweet | |||||
No comments:
Post a Comment