இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்

மழை :

291)

முகில்கண்டு கொட்டும் மழைகண்டு மக்கள்

திகில்கொண்டால் எங்கோப் பிழை



292)

மாறிவரும் காலமிது; சொல்வீரா மண்குளிர

மாரிவரும் காலமெது என்று



293)

கலிகாலம் எல்லாம்ஏன் உன்கண்முன் வீழும்

உழவை ஒதுக்கும் உலகு



294)

ஏரியுள் சேரும் மழைநீர் தரும்சோறு;

கூரையுள் என்றாலோ சேறு



295)

பிழைக்கும் வழியின்றி பள்ளத்துள் வீழும்

மழைநீரைப் பேணா உலகு


No comments: