331)
பறக்க முடிந்தும் கிறங்கிக் கிடந்தால்
பரணில் கிடைக்கும் இடம்
332)
புறம்பேசான் வந்தால் தழுவும்; பிறனென்றால்
எள்ளி நழுவும் உலகு
333)
இறுக்கும் இடத்தில் இருக்கும் நிலையைத்
துறந்தால் சிறக்குமுன் வாழ்வு
334)
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு
335)
தேங்கிக் கிடந்தால் நதியில்லை; தூங்கிக்
கிடந்தால் கடலில்லை போ
Tweet | |||||
No comments:
Post a Comment