இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 12, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க்கை :
331)
பறக்க முடிந்தும் கிறங்கிக் கிடந்தால்
பரணில் கிடைக்கும் இடம்

332)
புறம்பேசான் வந்தால் தழுவும்; பிறனென்றால்
எள்ளி நழுவும் உலகு

333)
இறுக்கும் இடத்தில் இருக்கும் நிலையைத்
துறந்தால் சிறக்குமுன் வாழ்வு

334)
வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி
முடியும் கணிதமில்லை வாழ்வு

335)
தேங்கிக் கிடந்தால் நதியில்லை; தூங்கிக்
கிடந்தால் கடலில்லை போ

No comments: