இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


அறிவு :


341
கொடுக்கும் மனத்தை கெடுக்கும் குணத்தை
விடுக்கும் துணிவே அறிவு

342
குறையை மறைக்க முனையா(து) அளவைக்
குறைக்க முயல்வ(து) அறிவு

343
துளையைச்சீர் செய்யாது நீர்சேர்க்கப் பாயும்
நிலையைத் தவிர்த்தல் அறிவு

344
தங்கத் திடம்சேரும் செம்பு நகையாகும்;
தங்குமிடம் தேர்வ(து) அறிவு

345
முயல்பிடிக்கும் கூரை முகம்பார்த்துக் கூறும்
இயல்பை அடைதல் அறிவு

No comments: