351)
கொள்ளையர் வாழ்வதும் தன்நலம் இல்லாத
கொள்கையர் வீழ்வதும் ஏன்
352)
வேலிக்கு அருகில் நடப்பதைக் காணாத
போலிகளாய் மாறியதும் ஏன்
353)
கண்முன் நிகழும் இழிச்செயலைக் கண்டிக்கும்
தன்மை அழிந்ததும் ஏன்
354)
உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் வெள்ளையுள்ளம்
இல்லாமல் போனதும் ஏன்
355)
உண்மையை ஊட்டிவிட்டு நல்வழியைக் காட்டிவிடும்
தன்மையின்றிப் போனதும் ஏன்
Tweet | |||||
No comments:
Post a Comment