இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 2, 2014

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


ஏன்..ஏன்..ஏன் ?!!!!!!!!!!!!!!!!!!!!!
351)​

கொள்ளையர் வாழ்வதும் தன்நலம் இல்லாத

கொள்கையர் வீழ்வதும் ஏன்


​352)​

வேலிக்கு அருகில் நடப்பதைக் காணாத​

போலிகளாய் மாறியதும் ஏன்


353)​

கண்முன் நிகழும் இழிச்செயலைக் கண்டிக்கும்

தன்மை அழிந்ததும் ஏன்


​354)​

உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் வெள்ளையுள்ளம்

இல்லாமல் போனதும் ஏன்


​355)​

உண்மையை ஊட்டிவிட்டு நல்வழியைக் காட்டிவிடும்

தன்மையின்றிப் போனதும் ஏன்

No comments: