விழி,அறி...! :)
366)
விடியும் வரையில் முடங்கிக் கிடந்தால்
விரைந்து முடியும் பொழுது
367)
முடிந்த வரையில் முடக்கம் தவிர்த்தால்
விரைந்து விடியும் பொழுது
368)
தலையில் இருந்தால்தான் கூந்தல்; தரையில்
கிடந்தால் அதன்பெயர் வேறு
369)
பாதி வரையும் படித்தறியும் பாடம்தான்
மீதி வழியின் விளக்கு
370)
ஒருவிரல் முன்சுட்ட மற்றதுமேல் நோக்க
மறுமூன்றும் காட்டும்உன் நெஞ்சு
Tweet | |||||
No comments:
Post a Comment