இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



என்னவனே..மன்னவனே..!​

​361)
​​நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்

நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்

​362)​
விழிமூடும் வேளையெல்லாம் ​,​ எந்தன் வழிமூடி

முன்வந்து நிற்பான் அவன்

​363)​
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால

மண்போல் கரையும் மனது

​364)​
அடக்கிவைப்பேன் எ ​ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல

அடங்கித்தான் போவான் பிறகு

​365)​
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்

எண்ணெயின்றித் துள்ளும் கடுகு

No comments: