என்னவனே..மன்னவனே..!
361)
நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்
நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்
362)
விழிமூடும் வேளையெல்லாம் , எந்தன் வழிமூடி
முன்வந்து நிற்பான் அவன்
363)
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால
மண்போல் கரையும் மனது
364)
அடக்கிவைப்பேன் எ ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல
அடங்கித்தான் போவான் பிறகு
365)
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்
எண்ணெயின்றித் துள்ளும் கடுகு
Tweet | |||||
No comments:
Post a Comment