இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 29, 2014

அவனிடமும் பேசுவேன் நான் !


இறைவன் / அறக்குறள்
386)
கடவுள்நீ என்முன் வரவேண்டும் என்றேன்;
கடஉள்நீ என்றான் அவன்


387)
வருவாய் குருவாய்; மலர்வாய் ஒருவாய்;
வருவாய் அதுவே எனக்கு


388)
தருவாய் தரிசனம் கண்ணுக்(கு); அதுபோல்
தருவாய் வருமோ எனக்கு


389)
கற்பனையாய்க் கற்பானை; சொற்பனையாய் விற்பானை;
அற்பனெனை காத்தணைப்பாய் நீ


390)
கறைகள் மறைந்து மறைகள் அறிய
இறைமுன் கரைதல் முறை

1 comment:

Yarlpavanan said...

ஆகா
அழகான வரிகள்
தொடருங்கள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.