401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர்
பறப்பார்தன் ஆற்றல் வியந்து
402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்
403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு
404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்
405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு
Tweet | |||||
1 comment:
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
Post a Comment