//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//
மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )
406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்
407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்
408)
விலங்கும் சிறையும் தவற்றைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது
409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து
410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு
Tweet | |||||
No comments:
Post a Comment