இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 29, 2014

ஏ...இறையே


கடும் கோபத்தின் வெளிப்பாடு ...
சான்றோர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்

கோபக்குறள் / என்குற்ள் 411 - 420

ஏ...இறையே

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றை
அள்ளித் தருகிறாய்! ஏன்?

​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?

துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு

சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்
தள்ளுவதா சாதனை​?​ சொல்

மெய்தானோ! ”இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்” என்போரின் கூற்று


​ஏன் இப்படி ? ​பிடியும்...என் சாபம் படியும் :
துதிப்போரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்போரைத் தூற்றும் உலகு

இறைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு

இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு

துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து

​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம் ​​

1 comment:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்