சான்றோர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்
கோபக்குறள் / என்குற்ள் 411 - 420
ஏ...இறையே
நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றை
அள்ளித் தருகிறாய்! ஏன்?
வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன் ?
துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு
சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்
தள்ளுவதா சாதனை? சொல்
மெய்தானோ! ”இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்” என்போரின் கூற்று
ஏன் இப்படி ? பிடியும்...என் சாபம் படியும் :
துதிப்போரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்போரைத் தூற்றும் உலகு
இறைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு
இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு
துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து
நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம்
Tweet | |||||
1 comment:
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
Post a Comment