இயற்கையைச் சொல்கிறேன்; நீவீர் இயன்றபொருள்
கொண்டால்நான் இல்லை பொறுப்பு
பூத்தாடும் தோட்டத்தில் காவலில்லை என்றானால்
கூத்தாடும் தேனுண்ணும் வண்டு
சட்டெனப் பற்றுமாம் வண்டுகள்; மொட்டுகள்
பட்டெனப் பூக்கும் பொழுது
கொய்யும் தொலைவிலுண்டு கொய்யாக் கனியிரண்டு;
காய்க்குமா கொய்துண்ணும் வாய்ப்பு
தாங்கும்தன் தண்டையும் தொய்திட வைத்திடும்
தூங்கும் பலாப்பல உண்டு
Tweet | |||||
No comments:
Post a Comment