இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 19, 2014

அவளதிகாரம் - இயற்கை..இயற்கையைத் தவிர வேறில்லை :


இன்பம்/ இயற்கையதிகாரம் / என்குறள் 436-440 /

இயற்கையைச் சொல்கிறேன்; நீவீர் இயன்றபொருள்
கொண்டால்நான் இல்லை பொறுப்பு
பூத்தாடும் தோட்டத்தில் காவலில்லை என்றானால்
கூத்தாடும் தேனுண்ணும் வண்டு
சட்டெனப் பற்றுமாம் வண்டுகள்; மொட்டுகள்
பட்டெனப் பூக்கும் பொழுது

கொய்யும் தொலைவிலுண்டு கொய்யாக் கனியிரண்டு;
காய்க்குமா கொய்துண்ணும் வாய்ப்பு

தாங்கும்தன் தண்டையும் தொய்திட வைத்திடும்
தூங்கும் பலாப்பல உண்டு

No comments: