இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 3, 2014

இன்பம் - அவனும் , அவளும் ..!


அவன் :
371)
சொத்தை இருந்தால்தான் என்னஎன் தத்தையிடம்;
சொத்தை எழுதிவைப்பேன் நான்

372)
சொத்தையுள் மெத்தையின் வித்தையின் உத்தியின்
வித்தையை வைத்தது எது


அவள் :
373)
உம்மையொன்று கேட்பேனாம்; உம்மென்று நில்லாமல்
உம்மென்று சொல்வீராம் நீர்

374)
உலகைவசம் செய்வானாம்; நல்லது அவனையே
என்கவசம் ஆக்குவேன் நான்

375)
பாயும் அவன்வேகம் கண்டு மிரண்டொதுங்கும்
பாயும் பயந்து புரண்டு