இறைவன் / அறக்குறள்
கடவுள்நீ என்முன் வரவேண்டும் என்றேன்;
கடஉள்நீ என்றான் அவன்
387)
வருவாய் குருவாய்; மலர்வாய் ஒருவாய்;
வருவாய் அதுவே எனக்கு
388)
தருவாய் தரிசனம் கண்ணுக்(கு); அதுபோல்
தருவாய் வருமோ எனக்கு
389)
கற்பனையாய்க் கற்பானை; சொற்பனையாய் விற்பானை;
அற்பனெனை காத்தணைப்பாய் நீ
390)
கறைகள் மறைந்து மறைகள் அறிய
இறைமுன் கரைதல் முறை