446)
கரையும் அலையும் உரசும் பொழுது;
கரையும் அலையும் மனது
447)
கரையில் உறங்கும் படகு: கடலுள்
இறங்க விரியும் சிறகு
448)
கடலின் மடியில் இரவின் முடிவில்
நொடியில் விடியும் பொழுது
449)
உதிர்ந்த பிறகே உதிக்கும் சிறகு;
பறக்கத் துவங்கும் சருகு
450)
தாகம் தணிக்க விழுமாம் மழைவிழுது;
மேகமது மோதும் பொழுது
Tweet | |||||
No comments:
Post a Comment