இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 7, 2015

கற்பனைச் சிறகடித்தால்.....


அழகியல் - சும்மா சில வரிகள் :

446)
கரையும் அலையும் உரசும் பொழுது;
கரையும் அலையும் மனது


447)
கரையில் உறங்கும் படகு: கடலுள்
இறங்க விரியும் சிறகு


448)
கடலின் மடியில் இரவின் முடிவில்
நொடியில் விடியும் பொழுது


449)
உதிர்ந்த பிறகே உதிக்கும் சிறகு;
பறக்கத் துவங்கும் சருகு


450)
தாகம் தணிக்க விழுமாம் மழைவிழுது;
மேகமது மோதும் பொழுது

No comments: