இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 31, 2015

உனக்குள்ளும் ஒளிந்திருப்பார் இவர் :




471)
வேலையின்றி நின்றிருப்பார்; ஆனாலும் வெட்கமின்றி
நேரமில்லை என்றுரைப்பார் பார்

472)
இல்லாத ஒன்றை இருப்பதாய்ச் சொல்லியே
பொல்லாங்கு செய்வார் இவர்

473)
ஆசை மலையளவு உள்ளிருந்தும் வீசை
விலையென்ன என்பார் இவர்

474)
குறைவில் நிறைபொருள் சொல்வார்; நிறைய
நிறைவின்றி பேசிடுவார் நின்று

475)
பூசணியைச் சோற்றில் மறைத்திடுவார் அன்(று);அதையே
காற்றில் கரைத்திடுவார் இன்று


பொருள் /வாழ்க்கை

No comments: