491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட
பிறகே வருமாம் அது
492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு
493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது
பெற்றுத் தரும்நற் சிறப்பு
494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு
495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து
Tweet | |||||
2 comments:
அருமையான புதுக்குறள்கள்! வாழ்த்துக்கள்!
சிறகசைந்து வானம் செலுத்துகின்ற வெண்பாக்
குறளிசைக்க இல்லை குறை!
அனைத்து வெண்பாக்களும் அருமை ஐயா.
த ம 1
Post a Comment