இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 25, 2015

குழந்தை உலகும் .....வளர்ப்பு முறையும்....!


506)
ஊக்கம் கிடைத்து வளரும் குழந்தையின்
நோக்கம் அடையும் சிறப்பு


507)
கற்பதிலும் கற்றுத் தருவதிலும் குட்டிக்
குழந்தைக்கு நாமில்லை ஈடு


508)
புகழ்மொழி கேட்டு வளரும் குழந்தை
பழகும் வழியறி யும்


509)
கேலியால் வேகும் குழந்தை; அறிவில்லாக்
கோழிபோல் ஆகும் வளர்ந்து


510)
அடக்கி வளர்க்கும் குழந்தை; அடங்க
மறுக்கும் வளர்ந்த பிறகு


No comments: