516)
பெண்வலைக்குள் போய்ப்பாயும் ஆணினம்தான் தன்தலைமேல்
வெண்ணைவைத்துக் காத்திருக்கும் கொக்கு
517)
பெண்மையைக் கண்டுகொண்டேன் இவ்வுலகின் உச்சமென்று;
உண்மையை உண்டகன்றேன் பின்பு
518)
சந்தித்தேன் ஒவ்வோர் நொடியும்தேன்; ஓய்ந்தபின்
சிந்தித்தேன்; எல்லாமும் வீண்
519)
எத்திக்கும் தித்திக்கும் பெண்மானின் மாயையை
புத்திக்குச் சொல்வதுயார் இங்கு
520)
அறிவுரையை எள்ளும்; அறிஞரைக்கீழ் தள்ளும்;
அரிவையின் மேல்கொள்ளும் ஈர்ப்பு
Tweet | |||||
No comments:
Post a Comment