தலைமறையும் முன்வாழ்ந்து காட்டு; தலைமுறையும்
உன்தடத்தைப் பின்தொடரும் வாழ்வு
537)
உன்வரையில் உண்மையைக் கொண்டிருந்தால் இவ்வுலகில்
உள்ளவரை நன்மை தரும்
538)
தவறிழைக்க வாய்ப்பிருந்தும் தள்ளித் தவிர்ப்போரை
தெய்வமெனப் போற்றும் உலகு
539)
வீழ்வதுநீ என்றாலும் அங்(கு)அழுவோர் நால்வர்
எனில்நீ இறைநிலைக்கும் மேல்
540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு
Tweet | |||||
No comments:
Post a Comment