இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 20, 2015

கொஞ்ச(சு)ம் கோபக்காரி....!



541)
அதிகாரம் மட்டும் அறிவாள்; அதனால்தான்
வள்ளுவனுக்கு என்னவளும் ஒப்பு

542)
கன்னிவந்து சேர்த்தணைப்பாள் என்றோடி வந்தேன்நான்;
கண்ணிவைத்துப் காத்திருந்தாள் பெண்

543)
நொய்நொய்நொய் என்றவள் நைத்தால்தான் பொய்சொல்லும்
நோய்வளரும் என்பதுவும் மெய்

544)
நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளக் கரைவதில்
காக்கையும் காதலியும் ஒன்று

545)
எடுத்தெறிந்து பேசுவாள்; கையில் கிடைப்பது
எடுத்தெறிவாள் பேச்சைத் தொடர்ந்து


No comments: