இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 1, 2015

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!


--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தார் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு
(அல்லது)
பாருக்குள் நல்லநாடு என்றதனால்; பாருக்கு
அவர்பேரே வைக்கும் அரசு


557)
தண்ணி அஅடிப்பார்அபார் தன்னை அழிப்பார்பார்
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு



No comments: