இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 2, 2015

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்;
இறந்தால் பிரிவதுதான் நட்பு

No comments: