581)
உன்னால் முடியும் திமிறென்பார்; பின்அவரே
ஏன்உனக்கு இத்திமிரென் பார்
582)
தப்பெதுவும் தண்டனைக்கு தப்பாது எனக்கொதிப்பார்;
தப்பேது எனக்குதிப்பார் பின்பு
583)
இப்படித்தான் நீயிருக்க வேண்டுமென்பார்; எப்படியும்
நானிருப்பேன் என்பார் பிறகு
584)
நல்லரைக் கெட்டவர் என்பார்;பின் கெட்டவரை
நல்லவர் என்பார் இவர்
585)
உப்பில்லா ஒன்றினை ஒப்பில்லை என்றுரைத்தால்
தப்பில்லை என்பார் இவர்
Tweet | |||||
No comments:
Post a Comment