இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 21, 2015

இரட்டை நாக்கர்...!



581)
உன்னால் முடியும் திமிறென்பார்; பின்அவரே
ஏன்உனக்கு இத்திமிரென் பார்

582)
தப்பெதுவும் தண்டனைக்கு தப்பாது எனக்கொதிப்பார்;
தப்பேது எனக்குதிப்பார் பின்பு

583)
இப்படித்தான் நீயிருக்க வேண்டுமென்பார்; எப்படியும்
நானிருப்பேன் என்பார் பிறகு

584)
நல்லரைக் கெட்டவர் என்பார்;பின் கெட்டவரை
நல்லவர் என்பார் இவர்

585)
உப்பில்லா ஒன்றினை ஒப்பில்லை என்றுரைத்தால்
தப்பில்லை என்பார் இவர்


No comments: