இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 15, 2015

கலிகாலம் ...இது கலிகாலம்...!



601)
ஊர்சேர்ந்து தேரிழுப்பார் என்பது(அ)ன்று; ஆறேழு
பேர்சேர்ந்தால் தேரெரிப்பார் இன்று

602)
சூழல்பார்த்து ஊழல் நடந்ததன்று; ஊழலில்லாச்
சூழலே இல்லையாம் இன்று

603)
மெய்யது உலவத் துவங்கும்முன்; பொய்யது
உலகத்தைச் சுற்றிவிடும் இன்று

604)
இயலாரின் வெற்றி; முயல்வோரின் தோல்வி;
இயல்பாகிப் போய்விட்டது இன்று

605)
ஏய்த்துப் பிழைக்குமந்தத் தந்திரத்தைக் கற்றோர்க்கே
வாய்க்கும் சுதந்திரம் இன்று

No comments: