இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே...உமக்குச் சொல்வேன் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​


--- உன்னால் முடியும் ---
1)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு;
வரம்கேட்டு நிற்பது எதற்கு

2)
வாழைக்கும் உண்டாம் வழித்தொடர ஓர்கன்று;
நாளைநமக்(கு) உண்டென்று நம்பு

3)
எதனால் இழக்கிறாய் உன்தெம்(பு); எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு

4)
தலைக்கனம் இல்லா(து) இலக்கணம் தாண்டு;
துலங்கும் புதிய உலகு

5)
தடைமுடையைக் கண்டுபிடி;. வென்றுமுடி; வாழ்வின்
மடைதிறக்கும் நல்ல படி

---அறிவரை சில ----
6)
பலம்கொண்டேன் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

7)
வாயில் கடக்கும் பொழுதுபிறர் வாயில்
விழாதவகை வாழ்வ(து) அறிவு

8)
தூக்கம் ஒருதோளும் ஏக்கம் மறுதோளும்
தூக்கினால் வீணாகும் வாழ்வு

9)
பழம்பெரும் சொற்பொருளை புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு

10)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு



No comments: