இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 4, 2016

எதிரியை முதலில் அறி !


621)
பலம்கொண்டோம் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

622)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

623)
தனைஎதிரி தாண்டும் பொழுது; தளைஉதறி
முந்தார்முன் நிற்கும் முடிவு

624)
எதிர்க்க முடியாத ஒன்றெதிர் நின்றால்
தவிர்த்து விடுவது நன்று

625)
பெறப்போகும் வெற்றிஉன் முன்வரப் போகும்
எதிரின் திறத்தைப் பொறுத்து

No comments: