641)
இங்குமுள்ள தங்குமுள்ள தெங்குமுள்ள தென்றுமுள்ள
என்தமிழ்த்தாய் முன்வைத்தேன் வாழ்த்து
642)
புலம்பெயர்ந்தோர் வாயில் நிதம்புழங்கி நாளும்
பலம்பெற்று நீளும் தமிழ்
643)
இகழ்ந்துமிழ்ந்து கொல்லவரும் சொல்தமிழ் என்றால்
அமிழ்தெனவும் கொள்வோர் உளர்
644)
அமிழ்தாய் எதையோ நினைத்தாய் அமிழ்ந்தாய்;
உணர்வாய் தமிழ்தான்உன் தாய்
645)
தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;
தானே செழிக்கும் தமிழ்
Tweet | |||||
No comments:
Post a Comment