நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...எல்லாரையும் சென்றடையும் வகையில் எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது நீண்டநாள் கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )
என்குறள் :- 646 - 655
பாட்டன் திருக்குரலை_பாட்டாய், திருக்குறளாய்
ஏட்டில் விதைப்பேன் இனி
நபி மொழிகள்:
இறையை எதனோடும் செய்யாதீர் ஒப்பீடு;
அறிவீர் அவர்க்கில்லை ஈடு ./அல்குர்ஆன் 19:74
அணுஅளவு தீதோ அணுஅளவு நன்றோ
அனுபவிப்பார் செய்தோர் அதை ./அல்குர்ஆன் 99:7,8
கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவனம்
தவறித் தொழுவோர்க்குக் கேடு ./அல்குர்ஆன் 107: 5,6,7
கூடும்நற் செல்வமுடன் நீண்டநாள் வாழ்ந்திட
கூட்டுக் குடித்தனம் செய் ./புகாரி 2067
தன்உழைப்பால் வந்தடையும் எவ்வுணவும் இவ்வுலகில்
ஆகச் சிறந்த உணவு ./புகாரி 2072
தங்கத்தில் ஆனதட்டில் உண்போரின் அங்கத்துள்
சேரும் நரக நெருப்பு ./புகாரி 5634
உருவோஉன் கைஇருப்போ அன்றி பிறர்க்(கு)உருகும்
உள்ளம் இறையின் விருப்பு ./முஸ்லிம் 5012
தற்பெருமை உன்னுள் கடுகளவே சேர்ந்தாலும்
சொர்க்கத்தில் இல்லை இடம் ./முஸ்லிம் 131
புறம்பேசும் வீணருக்குச் சொர்க்கத்து அருகில்
வருவதற்கும் வாராது வாய்ப்பு ./முஸ்லிம் 168
Tweet | |||||
No comments:
Post a Comment