செயலின் விளைவனைத்தும் எண்ணத்தைச் சார்ந்தே
இயல்பாய் அமைந்து விடும்............................. புகாரி 1
இல்லார்ப் பசிப்பிணியைப் போக்குவதும்; எல்லார்க்கும்
சொல்லும்நல் வாழ்த்தும் சிறப்பு ........................ புகாரி 12, 28
தம்உயர்வைத் தம்உறவும் பெற்றடைய வேண்டாதார்
கொண்டஇறை நம்பிக்கை வீண் ........................புகாரி 13
மார்க்கநலன் காப்பதற்கு; தன்னுள் ஒடுங்குவதும்
மார்க்கத்தின் ஓரம்சம் ஆம் ............................. புகாரி 19
நாணும் குணமும் இறையின்மேல் நம்பிக்கைக்
கொண்டோரின் நற்பண்பா கும் ........................... புகாரி 24
நன்றி :படம் :FACE BOOK :Des Pardess / Haroon Rasheed
Tweet | |||||
No comments:
Post a Comment