இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 4, 2016

நபி மொழி - 3 ......


என்குறள் 686 - 690 :


செயலின் விளைவனைத்தும் எண்ணத்தைச் சார்ந்தே
இயல்பாய் அமைந்து விடும்
............................. புகாரி 1

இல்லார்ப் பசிப்பிணியைப் போக்குவதும்; எல்லார்க்கும்
சொல்லும்நல் வாழ்த்தும் சிறப்பு
........................ புகாரி 12, 28

தம்உயர்வைத் தம்உறவும் பெற்றடைய வேண்டாதார்
கொண்டஇறை நம்பிக்கை வீண்
........................புகாரி 13

மார்க்கநலன் காப்பதற்கு; தன்னுள் ஒடுங்குவதும்
மார்க்கத்தின் ஓரம்சம் ஆம்
............................. புகாரி 19

நாணும் குணமும் இறையின்மேல் நம்பிக்கைக்
கொண்டோரின் நற்பண்பா கும்
........................... புகாரி 24

நன்றி :படம் :FACE BOOK :Des Pardess / Haroon Rasheed

No comments: