இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 21, 2016

நபிமொழி - 11 ... பயமேன் !


நானிருக்க பயமேன் !
766)
அஞ்சாதீர் நீர்எதற்கும்; பார்த்தபடி கேட்டபடி
உங்களுடன் தானிருப்பேன் நான்
............... குர்ஆன் 20:46

767)
எமைநீர் நினைத்திருப்பீர்; நானும் உமைத்தான்
நினைத்த படியிருப்பேன் ஆம்
.................. குர்ஆன் 2:152

768)
அறிவுரையைத் தந்தோம் பிறர்க்கு; மறைந்திருக்கும்
செய்தி அறிவார் பிறகு
........................ குர்ஆன் 38:87 88

அவனிருக்க பயமேன் !
769)
இறையை நினைத்துத் தொழும்பொழுது உந்தன்
அருகில் இருப்பான் அவன்
.................... முஸ்லிம்5212

770)
அருகில் இருப்பான் பதிலும் தருவான்
இறைமுன் துதிக்கும் பொழுது
.................. குர்ஆன் 2:186

No comments: