இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 2, 2016

நபி மொழி - 7 .... மரணம் !


என்குறள் : 726 - 730


இறைவிருப்பம் இன்றி எவரும் இறக்க
வழியில்லை என்பது அறி
.................................. குர்ஆன் 03:145

மறைவாய் இருந்தாலும் நிச்சயித்த நாளில்
மரணம்உனை வந்துஅடையும் ஆம்
........................குர்ஆன் 04:78

இறையின் வழியில் அறப்போர் புரிந்து
மரணம் அடைந்தால் சிறப்பு
...............................முஸ்லிம்3824

அறப்போரில் வீழ்ந்தோர் குறைகள்; கடன்தவிர்த்து
மன்னிக்கப் பட்டு விடும்
.................................... முஸ்லிம்3830

இன்னலெதிர் கொள்ளாது இறக்க நினைப்போரின்
முன்வந்து நிற்கும் இழிவு
................................. முஸ்லிம்5203

No comments: