731)
தீண்டாது தன்எல்லைத் தாண்டும் அவன்செயலால்
தூண்டாது எரியும் திரி
732)
மோகத்தின் தாகத்தால் என்இடைப் பற்றும்நீ;
மேகத்து இடைப்பற்றும் தீ
733)
சம்மதம் கேட்கும் வரைதான் அவன்குழந்தை
தந்தபின்நான் ஆவேன் அது
734)
ஆனவரை நானவரை அள்ளி அணைத்திருப்பேன்
ஆணவரே நாணும் வரை
735)
என்விருப்பை முன்வந்து தன்விருப்பம் என்றுரைக்க
என்உருவைக் காட்டுமவர் கண்
Tweet | |||||
No comments:
Post a Comment