இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 3, 2016

நபிமொழி - 12 ... மார்க்கம் !


என்குறள் : 776 - 780
சந்தேகம் ஏதுமிங்கு இல்லை; இறையச்சம்
கொண்டோர்க்கு இதுதான் மறை
............... குர்ஆன் 02:02

மார்க்கத்தில் காட்டப் படுவதெல்லாம் நேர்வழிதான்;
வற்புறுத்தல் ஏதுமில்லை இங்கு
............... குர்ஆன் 02:256

இணையில்லான் சொல்லும் மறைஏற்போர் செல்லும்
வழியின்முன் சொர்க்கம் வரும்
............... முஸ்லிம் 16

இறையின் மறையை முழுமையாய் ஏற்போர்
முறையற்ற வற்றைச்செய் யார்
.............. முஸ்லிம் 104

தேவையிவன் என்றால்உன் பாதையை, சேவையை
மார்க்கத்தில் ஏற்றும் இறை
.................. புகாரி 71

No comments: