இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 13, 2016

அயலகவியல் !


786)
விடுதிக்கும் வீட்டிற்கும் மாற்றுண்டு அறிவாய்;
சடுதியில் வந்தடை வாய்


787)
ஒளிதர தன்னை இழக்கும் மெழுகுவர்த்திக்கு
ஒப்பு வெளிநாட்டு உழைப்பு


788)
புலம்பெயர என்னவழி என்போர் அறியார்
புலம்பெயர்ந்தோர் கொண்ட வலி


789)
இரைதேடி அன்று பறந்தவன் ஆனான்
கரைநாடாக் கப்பலைப் போன்று


790)
அயல்நாட்டில் எல்லாம் கிடைத்தாலும்; வாழ்ந்த
வயல்வீட்டை நாடும் மனது

No comments: