அன்புடையோன் முன்னிலையில் மன்னிக்க வேண்டினால்
வேண்டுதலை ஏற்பான் அவன் ..............................குர்ஆன் 02:160
அறியாமல் தீதிழைத்தோர் பின்அறிந்து மன்னிக்கக்
கோரினால் செய்வான் அவன் ...............................குர்ஆன் 04:17
எண்ணம்போல் தண்டிக்க; எண்ணம்போல் மன்னிக்க
உண்டாம் உரிமை இறைக்கு ...............................குர்ஆன் 05:40
அச்ச உணர்வூட்டித் தண்டிக்கும்; உச்சத்தில்
மன்னிக்கும் அன்புடையோன் ஆம் ..........................குர்ஆன் 05:98
பாவத்தை மன்னிப்பான்; பாவியைத் தண்டிப்பான்;
பாவத்தை ஏற்பான் அவன் ...............................குர்ஆன் 40:03
Tweet | |||||
No comments:
Post a Comment