இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 14, 2017

நபிமொழி - 16 ......மன்னிப்பு ..!


என்குறள்:- 866 - 890
அன்புடையோன் முன்னிலையில் மன்னிக்க வேண்டினால்
வேண்டுதலை ஏற்பான் அவன்
..............................குர்ஆன் 02:160

அறியாமல் தீதிழைத்தோர் பின்அறிந்து மன்னிக்கக்
கோரினால் செய்வான் அவன்
...............................குர்ஆன் 04:17

எண்ணம்போல் தண்டிக்க; எண்ணம்போல் மன்னிக்க
உண்டாம் உரிமை இறைக்கு
...............................குர்ஆன் 05:40

அச்ச உணர்வூட்டித் தண்டிக்கும்; உச்சத்தில்
மன்னிக்கும் அன்புடையோன் ஆம்
..........................குர்ஆன் 05:98

பாவத்தை மன்னிப்பான்; பாவியைத் தண்டிப்பான்;
பாவத்தை ஏற்பான் அவன்
...............................குர்ஆன் 40:03

No comments: