861)
வீர விளையாட்டில் நேராய் விவசாயம்
சேரவழி செய்தது அரசு
862)
ஏடெடுப்போர் ஓங்கி இருந்தாலும் ஏரெடுப்போர்
ஏங்கினால் ஓடெடுக்கும் நாடு
863)
உழவன் உழைத்திருக்க உண்டிருந்தோம் அன்று/இன்று
உழவனையே உண்கிறோம் மென்று
864)
உழைப்பே உயர்வுதரும் என்றால் உழவன்
நிலைதாழ்ந்தே போவது எதற்கு
865)
விதைத்தது அனைத்தும் விளைந்தும் செழிக்கவில்லை
ஏனிங்கு உழவன் நிலை
Tweet | |||||
No comments:
Post a Comment