இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 10, 2017

இலவு காக்கும் உழவு..!


படம்:நன்றி-RAVI PALETTE
861)
வீர விளையாட்டில் நேராய் விவசாயம்
சேரவழி செய்தது அரசு


862)
ஏடெடுப்போர் ஓங்கி இருந்தாலும் ஏரெடுப்போர்
ஏங்கினால் ஓடெடுக்கும் நாடு


863)
உழவன் உழைத்திருக்க உண்டிருந்தோம் அன்று/இன்று
உழவனையே உண்கிறோம் மென்று


864)
உழைப்பே உயர்வுதரும் என்றால் உழவன்
நிலைதாழ்ந்தே போவது எதற்கு


865)
விதைத்தது அனைத்தும் விளைந்தும் செழிக்கவில்லை
ஏனிங்கு உழவன் நிலை

No comments: